/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வாரச்சந்தைகளில் எடை மோசடி கண்டுகொள்ளாத அதிகாரிகள்
/
வாரச்சந்தைகளில் எடை மோசடி கண்டுகொள்ளாத அதிகாரிகள்
ADDED : பிப் 15, 2024 05:05 AM
திருவாடானை: திருவாடானை தாலுகாவில் கிராமங்களில் நடைபெறும் வாரச்சந்தைகளில் அதிகாரிகள் கண்காணிப்பு இல்லாததால் முத்திரையிடப்படாத எடை கற்கள் பயன்படுத்துவதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
திருவாடானை, சின்னக்கீரமங்கலம், வெள்ளையபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் வாரந்தோறும் குறிப்பிட்ட கிழமைகளில் வாரச்சந்தை நடக்கிறது. பொதுமக்கள் தேவையான பொருட்களை வாங்கி செல்வார்கள்.
விலை மலிவாக கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வாங்க வரும் கிராம மக்களை வெளி மாவட்ட வியாபாரிகள் எடை குறைவாக கொடுத்து ஏமாற்றுவதாக புகார் எழுந்துள்ளது.
மதுரை, காரைக்குடி, தொண்டி, ராமேஸ்வரம், ஜெகதாபட்டினம பகுதிகளை சேர்ந்த மீன் வியபாரிகளும் சந்தையில் விற்கின்றனர். பலர் முறையாக முத்திரையிடாத எடை கற்கற்களை பயன்படுத்துகின்றனர்.
மீன், காய்கறி வியாபாரிகள் எடை குறைவாக கொடுத்து ஏமாற்றுகின்றனர். கிலோவிற்கு 100 முதல் 200 கிராம் வரை குறைவாக உள்ளது.
சம்பந்தபட்ட அதிகாரிகள் முத்திரை இடாத எடை கற்களை பறிமுதல் செய்வதுடன் டிஜிட்டல் தராசுகளை பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.

