/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சாயல்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன் ஆக்கிரமிப்பு கடை கண்டு கொள்ளாத அலுவலர்கள்
/
சாயல்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன் ஆக்கிரமிப்பு கடை கண்டு கொள்ளாத அலுவலர்கள்
சாயல்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன் ஆக்கிரமிப்பு கடை கண்டு கொள்ளாத அலுவலர்கள்
சாயல்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன் ஆக்கிரமிப்பு கடை கண்டு கொள்ளாத அலுவலர்கள்
ADDED : ஆக 23, 2025 11:37 PM
சாயல்குடி: சாயல்குடி பேரூராட்சி பஸ் ஸ்டாண்ட் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது.
தரம் உயர்த்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் முன்பு தற்காலிக கடைகள் உள்ளன. இந்நிலையில் ஒவ்வொரு கடைகளின் முன்பாகவும் ரோடுகளை ஆக்கிரமித்து பந்தல் அமைத்தும் உள்ளனர்.
இதனால் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வரக்கூடிய ஆம்புலன்ஸ் உள்ளிட்ட இதர வாகனங்கள் உள்ளே செல்வதற்கு பெரும் இடையூறாகவே உள்ளது.
இங்கு ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை தோறும் வாரச்சந்தை நடக்கிறது. அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் மற்றும் அவசர தேவைக்கான ஆம்புலன்ஸ் செல்வதற்கு முறையான பாதை வசதி செய்யாமல் பெரும் சிரமத்தை சந்திக்கின்றனர்.
தன்னார்வலர்கள் கூறியதாவது:
சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் சிகிச்சை பெறுவதற்காகவும் பிரசவம் உள்ளிட்டவைகளுக்காகவும் இங்கு வருகின்றனர்.
ஆரம்ப சுகாதார நிலையம் முன்புற பகுதி மற்றும் நுழைவு வாயில் இடங்களில் ஆரம்பித்து இரு புறங்களிலும் தொடர்ச்சியாக கடைகள் உள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
எனவே சாயல்குடி பேரூராட்சி நிர்வாகத்தினர், போலீசார் ஒன்றிணைந்து முறையாக ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.