sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

பல ஆண்டுகளாக சேதமடைந்த சடைமுனியன் வலசை சாலை கண்டுகொள்ளாத அதிகாரிகள்

/

பல ஆண்டுகளாக சேதமடைந்த சடைமுனியன் வலசை சாலை கண்டுகொள்ளாத அதிகாரிகள்

பல ஆண்டுகளாக சேதமடைந்த சடைமுனியன் வலசை சாலை கண்டுகொள்ளாத அதிகாரிகள்

பல ஆண்டுகளாக சேதமடைந்த சடைமுனியன் வலசை சாலை கண்டுகொள்ளாத அதிகாரிகள்


ADDED : செப் 07, 2025 02:52 AM

Google News

ADDED : செப் 07, 2025 02:52 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கீழக்கரை: ஏர்வாடி ஊராட்சிக்கு உட்பட்ட சடைமுனியன் வலசையில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக சேதமடைந்த நிலையில் உள்ள தார் சாலையால் கிராம மக்கள் பெரும் சிரமத்தை சந்திக்கின்றனர்.

ஏர்வாடி தர்கா பின்புறம் உள்ள கடற்கரை கிராமமாக சடை முனியன் வலசை உள்ளது. இங்கு 2 கி.மீ., க்கு சேதமடைந்த தார் ரோட்டில் பொதுமக்கள், மீனவர்கள், பள்ளி மாணவர்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சடைமுனியன் வலசை கிராம மக்கள் கூறியதாவது: 2 கி.மீ.,க்கு தார் ரோடு முற்றிலும் சேதமடைந்துள்ளதால் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கிராம மக்கள் சார்பில் போராட்ட அறிவிப்பு செய்திருந்தோம். இதனடிப்படையில் கடலாடி யூனியன் அதிகாரிகள் போராட்டம் ஏதும் செய்ய வேண்டாம். உடனடியாக நாங்கள் அதற்கான நடவடிக்கை எடுப்போம் என உத்தரவாதம் அளித்தனர்.

தற்போது பல மதங்களாகியும் எந்த நடவடிக்கையும் இன்றி சாலை உள்ளதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்தை சந்திக்கின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் எங்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்றனர்.






      Dinamalar
      Follow us