/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஊருணியில் மடை சேதம் நீரை சேமிக்க வழியில்லை கண்டுகொள்ளாத அதிகாரிகள்
/
ஊருணியில் மடை சேதம் நீரை சேமிக்க வழியில்லை கண்டுகொள்ளாத அதிகாரிகள்
ஊருணியில் மடை சேதம் நீரை சேமிக்க வழியில்லை கண்டுகொள்ளாத அதிகாரிகள்
ஊருணியில் மடை சேதம் நீரை சேமிக்க வழியில்லை கண்டுகொள்ளாத அதிகாரிகள்
ADDED : ஜன 04, 2024 01:50 AM
பெருநாழி; பெருநாழி அருகே பொந்தம்புளி ஊராட்சியில் வாழவந்தாள்புரம் ஊருணி மடை சேதமடைந்துள்ளதால் முழுமையாக நீரை சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மக்கள் புகார் தெரிவித்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.
பொந்தம்புளி ஊராட்சியில் வாழவந்தாள்புரம் ஊருணி அமைந்துள்ளது. 3 ஏக்கரில் வாழவந்தாள்புரம் ஊருணியில் ஒவ்வொரு பருவமழை காலங்களிலும் உரிய முறையில் தண்ணீர் சேகரிக்க வழியின்றி உள்ளது. வரத்து கால்வாய் அருகே உள்ள மடை சேதமடைந்து இருப்பதால் பொதுமக்கள் பயன்படுத்த வழியின்றி சிரமத்திற்குள்ளாகின்றனர்.
பொந்தம்புளி ஊராட்சி துணைத் தலைவர் ஆறுமுகம் கூறியதாவது: வாழவந்தாள்புரம் ஊருணியில் மடை உடைந்து மூன்று ஆண்டுகளாகிறது. அதனை பழுது நீக்க கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தும், எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே மாவட்ட நிர்வாகம் குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என்றார்.