நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முதுகுளத்துார் : முதுகுளத்துார் அருகே பேரையூர் இன்ஸ்பெக்டர் துரைப்பாண்டியன் உத்தரவின் பேரில் போலீசார் ஆப்பனுார் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது கிடாத்திருக்கை- ஆப்பனுார் ரோட்டில் ஊருணி அருகே கிடாத்திருக்கை பாலமுருகன் 31, நின்றிருந்தார். அவரை சோதனை செய்த போது 2 கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது. பேரையூர் இன்ஸ்பெக்டர் துரைபாண்டியன் வழக்கு பதிந்து பாலமுருகனை கைது செய்தார்.

