/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு நாள் தற்செயல் விடுப்பு மறியல் போராட்டம்
/
கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு நாள் தற்செயல் விடுப்பு மறியல் போராட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு நாள் தற்செயல் விடுப்பு மறியல் போராட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு நாள் தற்செயல் விடுப்பு மறியல் போராட்டம்
ADDED : அக் 26, 2025 04:51 AM
பெருநாழி: ஊழியர்களின் 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அக்., 29ல் ஒரு நாள் தற்செயல் விடுப்பு - மறியல் போராட்டம் நடத்த உள்ளதாக ஊராட்சி செயலர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் பெருநாழி முருகன் தெரிவித்தார். அவர் கூறியதாவது:
துாய்மைக் காவலர்களின் மாத சம்பளத்தை ரூ. 10 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். மக்கள் நலப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு காலமுறை ஊதியத்தை தற்போது காலமுறை ஊதியமாக நிர்ணயித்து பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
மேல்நிலை நீர் தேக்க தொட்டி இயக்குபவர்களின் பணிக்காலத்தை கருத்தில் கொண்டு சிறப்பு காலமுறை ஊதியம் ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும்.
ஊராட்சி செயலர்களை தமிழக அரசின் ஓய்வூதிய திட்டத்தில் இணைத்து ஊராட்சி ஒன்றிய பதிவறை எழுத்தருக்கு பொருந்தும் அனைத்து சலுகைகளும் வழங்க வேண்டும் உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் அக்., 29ல் ஒரு நாள் தற்செயல் விடுப்பு மற்றும் மறியல் போராட்டம் நடக்கிறது. இதனை தொடர்ந்து நவ., 24ல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடக்க உள்ளது எனக் கூறினார்.

