sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

காரை கொண்டு மோதியதில் ஒருவர் பலி; 11 பேர் காயம்

/

காரை கொண்டு மோதியதில் ஒருவர் பலி; 11 பேர் காயம்

காரை கொண்டு மோதியதில் ஒருவர் பலி; 11 பேர் காயம்

காரை கொண்டு மோதியதில் ஒருவர் பலி; 11 பேர் காயம்


ADDED : மே 04, 2025 02:03 AM

Google News

ADDED : மே 04, 2025 02:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்:பரமக்குடி அருகே நின்றிருந்தவர்கள் மீது காரை கொண்டு மோதியதில், ஒருவர் உயிரிழந்த நிலையில், 11 பேர் காயம் அடைந்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி பொன்னையாபுரத்தைச் சேர்ந்த மனோகரன் மகன் ராமநாதபிரபு, 30, என்பவர், ராமநாதபுரம் அருகே தெற்கு தரவையில் உள்ள மாமனார் வீட்டிற்கு நேற்றிரவு காரில் வந்தார்.

இவருக்கும், இதே ஊரைச் சேர்ந்த சிலருக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது.

இந்நிலையில், இதே ஊரைச் சேர்ந்த சிலர் சாலை ஓரத்தில் நின்றிருந்தனர். அப்போது, அவர்கள் மீது காரை கொண்டு ராமநாதபிரபு வேண்டுமென்றே அதி வேகத்தில் மோதினார்.

இதில் காயமடைந்த சாத்தையா, 55, மதுரை மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார். காயமடைந்த உதயபிரகாஷ், 21, சுதர்சன், 18, தீனதயாளன், 18, பி.சுதர்சன், 20, உட்பட 11 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக ராமநாதபிரபுவை கைது செய்த போலீசார், முன்விரோதம் காரணமாக கொலை செய்ய திட்டமிட்டு வேண்டுமென்றே காரை கொண்டு மோதினாரா என்ற கோணத்தில் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us