ADDED : டிச 22, 2024 08:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கமுதி : கமுதி அருகே மண்டலமாணிக்கம் சிலிப்பியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் விக்ரம் 24. வீட்டில் இருந்து கமுதிக்கு டூவீலரில் சென்றார்.
சிலிப்பியில் இருந்து கமுதி முக்கு ரோட்டில் மறைந்திருந்த அருப்புக்கோட்டை அருகே செம்பட்டியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி 24, வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி ரூ.1000 பணத்தை பறித்து தப்பி சென்றார். மண்டலமாணிக்கம் போலீசார் கிருஷ்ணமூர்த்தியை கைது செய்தனர்.