/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
விவசாயிகள் ஆலோசனை மைய கட்டடம் திறப்பு
/
விவசாயிகள் ஆலோசனை மைய கட்டடம் திறப்பு
ADDED : ஜூலை 07, 2025 11:14 PM
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை வளாகத்தில் ரூ.84 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ளன வேளாண் சந்தை நுண்ணறிவு மற்றும் விவசாயிகள் ஆலோசனை மையக் கட்டடத்தை முதல்வர் ஸ்டாலின் காணொளி மூலம் திறந்து வைத்தார்.
கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் குத்துவிளக்கேற்றி வேளாண் துறை, தோட்டக் கலைத்துறை சார்பில் 25 பேருக்கு வேளாண் இடுபொருட்கள் வழங்கினார். கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) பாஸ்கரமணியன், ராமநாதபுரம் நகாராட்சித் தலைவர் கார்மேகம், வேளாண் விற்பனை வணிகத்துறை துணை இயக்குநர் கோபாலகிருஷ்ணன், செயலாளர் மல்லிகா, தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் ஆறுமுகம் உட்பட விவசாயிகள் பங்கேற்றனர்.