/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கடலோர மாவட்டங்களில் ஆப்பரேஷன் 'சஜாக்' ஒத்திகை
/
கடலோர மாவட்டங்களில் ஆப்பரேஷன் 'சஜாக்' ஒத்திகை
ADDED : ஏப் 26, 2025 03:00 AM

ராமநாதபுரம், :காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப்பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதையடுத்து தமிழகத்தில் 14 கடலோர மாவட்டங்களில் கன்னியாகுமரி முதல் சென்னை வரை 1076 கி.மீ., கடற்கரை பகுதியில் சஜாக் ஆப்பரேஷன் நடந்து வருகிறது. கடற்படை, கடலோர காவல்படை, மரைன் போலீசார், உள்ளூர் போலீசார் இணைந்து இந்த ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றனர்.
போலீசார் பயங்கரவாதிகள் போல் வேடமிட்டு கடற்கரை பகுதியில் ஊடுருவல் செய்வதையும், அவர்களை தடுத்து நிறுத்துவதும் நடந்தது. நேற்று காலை 7:00 மணிக்கு துவங்கிய ஒத்திகை இரவு 7:00 மணி வரை நடந்தது.
கடலோர காவல் படையின் ேஹாவர் கிராப்ட், கடற்படை படையின் ரோந்து கப்பல்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டன.

