sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

மீண்டும்  மக்களிடமிருந்து மனு வராமல்  செயல்பட உத்தரவு

/

மீண்டும்  மக்களிடமிருந்து மனு வராமல்  செயல்பட உத்தரவு

மீண்டும்  மக்களிடமிருந்து மனு வராமல்  செயல்பட உத்தரவு

மீண்டும்  மக்களிடமிருந்து மனு வராமல்  செயல்பட உத்தரவு


ADDED : மார் 18, 2025 06:44 AM

Google News

ADDED : மார் 18, 2025 06:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: தீர்வு வழங்க முடியாத மனுக்கள் நிலை குறித்து எடுத்துரைக்க வேண்டும். ஒரு முறைக்கு மேல் மீண்டும் மக்களிடம் இருந்து மனுக்கள் வராத வகையில் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் உத்தரவிட்டுள்ளார்.

பழைய கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் தலைமை வகித்தார். வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, தனிநபர் வீடு வழங்கும் திட்டம், குடிநீர் இணைப்பு வழங்குதல் உள்ளிட்டவை தொடர்பாக 370 மனுக்கள் மக்களிடம் பெறப்பட்டன.

கலெக்டர் கூறியதாவது: ஒவ்வொரு வாரமும் மக்களிடம் பெறக்கூடிய மனுக்களுக்கு உரிய நடவடிக்கை மேற்கொண்டு ஒரு மாதத்திற்குள் தீர்வு வழங்க வேண்டும். தீர்வு வழங்க முடியாத மனுக்கள் நிலை குறித்து மனுதாரர்களிடம் அலுவலர்கள் எடுத்துரைக்க வேண்டும். மக்கள் தங்கள் கோரிக்கை தொடர்பாக ஒரு முறைக்கு மேல் மீண்டும் மனு அளிக்க வராத வகையில் கவனமாக செயல்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

மாவட்ட வருவாய் அலுவலுர் கோவிந்தராஜலு, சமூகபாதுகாப்புத்திட்ட தனித்துணை கலெக்டர் தனலெட்சுமி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தவச்செல்வம், அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us