sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

நயினார்கோவிலில் வெட்டி சாய்க்கப்பட்ட பனை மரங்கள்; மர்ம நபர்கள் மீது நடவடிக்கை பாயுமா

/

நயினார்கோவிலில் வெட்டி சாய்க்கப்பட்ட பனை மரங்கள்; மர்ம நபர்கள் மீது நடவடிக்கை பாயுமா

நயினார்கோவிலில் வெட்டி சாய்க்கப்பட்ட பனை மரங்கள்; மர்ம நபர்கள் மீது நடவடிக்கை பாயுமா

நயினார்கோவிலில் வெட்டி சாய்க்கப்பட்ட பனை மரங்கள்; மர்ம நபர்கள் மீது நடவடிக்கை பாயுமா


ADDED : ஜூலை 24, 2025 10:27 PM

Google News

ADDED : ஜூலை 24, 2025 10:27 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நயினார்கோவில்; பரமக்குடி அருகே நயினார்கோவில் ஒன்றியம் காரடர்ந்தகுடி கிராமத்தில் 40க்கும் மேற்பட்ட பனை மரங்கள் மர்ம நபர்களால் வெட்டி சாய்க்கப்பட்டுள்ளது.

ஒரு பனைமரம் வளர்ந்து பயன் தர சுமார் 15 ஆண்டுகள் ஆகிறது. இதில் நுங்கு, பதநீர், பனங்கிழங்கு, பனை ஓலைகள் என கற்பக விருட்சமாக விளங்குகிறது. நயினார்கோவில் ஒன்றியம் காரடர்ந்தகுடி பகுதியில் 500க்கும் மேற்பட்ட மரங்கள் உள்ளன. இவற்றை வெட்டுவோர் மீது சட்டப்படி அபராதம் மற்றும் சிறை தண்டனை விதிக்கப்படுகிறது. தற்போது எவ்வித அனுமதியும் பெறாமல் கடந்த சில நாட்களாக காரடர்ந்தகுடியில் 40க்கும் மேற்பட்ட பனை மரங்கள் பட்டா, புறம்போக்கு நிலங்களில் சிலர் வெட்டியுள்ளனர்.

கிராம மக்களின் தகவலின் பெயரில் வருவாய் அதிகாரிகள் கணக்கிட்டு வருகின்றனர். போலீசார் உள்ளிட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என மக்கள் வலியுறுத்தினர்.






      Dinamalar
      Follow us