/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பாம்பன் மீனவர்களுக்கு ஆக.,19 வரை காவல்
/
பாம்பன் மீனவர்களுக்கு ஆக.,19 வரை காவல்
ADDED : ஆக 06, 2025 12:13 AM
ராமேஸ்வரம்:ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே பாம்பனிலிருந்து மீன் பிடிக்கச் சென்று கைதான மீனவர்கள் 9 பேருக்கு ஆக.,19 வரை சிறைக்காவலை நீட்டித்து இலங்கை புத்தளம் நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஜூலை 28ல் பாம்பனில் இருந்து டேவிட் என்பவரது நாட்டுப்படகில் 9 மீனவர்கள் மன்னார் வளைகுடா கடலில் மீன்பிடிக்கச் சென்றனர். அவர்களை இலங்கை கடற்படை வீரர்கள் கைது செய்து புத்தளம் சிறையில் அடைத்தனர். காவல் தேதி முடிந்ததையடுத்து நேற்று மீனவர்களை போலீசார் புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மீனவர்களை ஜூலை 19 வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து மீனவர்கள் போலீஸ் பாதுகாப்புடன் மீண்டும் புத்தளம் சிறையில் அடைக்கப்பட்டனர். மீனவர்கள் விடுவிக்கப்படலாம் என அவர்களது குடும்பத்தினர் எதிர்பார்த்திருந்த நிலையில் அவர்களது காவல் தேதி நீட்டிப்பு செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.