sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், செப்டம்பர் 11, 2025 ,ஆவணி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

ஆக.25 வரை பாம்பன் மீனவர்கள் காவல் நீட்டிப்பு

/

ஆக.25 வரை பாம்பன் மீனவர்கள் காவல் நீட்டிப்பு

ஆக.25 வரை பாம்பன் மீனவர்கள் காவல் நீட்டிப்பு

ஆக.25 வரை பாம்பன் மீனவர்கள் காவல் நீட்டிப்பு


ADDED : ஆக 19, 2025 01:20 AM

Google News

ADDED : ஆக 19, 2025 01:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம்; இலங்கை சிறையில் உள்ள பாம்பன் மீனவர்கள் 10 பேருக்கு ஆக., 25 வரை சிறைக்காவலை நீட்டித்து புத்தளம் நீதிமன்றம் உத்தரவிட்டது.

பாம்பனில் இருந்து ஆக., 5 ல் சீனி என்பவரது விசைப்படகில் மீன்பிடிக்க சென்ற 10 மீனவர்களை இலங்கை கடற்படை வீரர்கள் கைது செய்து புத்தளம் சிறையில் அடைத்தனர். வாய்தா நாளான நேற்று மீனவர்கள் 10 பேரையும் புத்தளம் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். மீனவர்களை ஆக.,25 வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து மீனவர்களை மீண்டும் புத்தளம் சிறையில் போலீசார் அடைத்தனர். தொடர்ந்து 13 நாட்கள் சிறையில் இருந்த மீனவர்கள் விடுவிக்கப்படலாம் என அவர்களது குடும்பத்தினர் எதிர்பார்த்த நிலையில் மீண்டும் சிறைக் காவலை நீட்டித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராமேஸ்வரத்தில் இருந்து ஆக., 5 ல் மீன் பிடிக்கச் சென்ற ராமநாதபுரம் அருகே திருப்பாலைக்குடி மீனவர்கள் விமல்ராஜ் 24, மாதேஷ் 20, கார்த்தி 21, சத்தீஸ்வரன் 21, ஆகியோரை இலங்கை கடற்படை வீரர்கள் கைது செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர். வாய்தா நாளான நேற்று அவர்களை ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். அவர்களை செப்., 1 வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.






      Dinamalar
      Follow us