sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

குண்டும், குழியுமாக மாறிய பாம்பன் பாலம்: பயணிகள் அவதி

/

குண்டும், குழியுமாக மாறிய பாம்பன் பாலம்: பயணிகள் அவதி

குண்டும், குழியுமாக மாறிய பாம்பன் பாலம்: பயணிகள் அவதி

குண்டும், குழியுமாக மாறிய பாம்பன் பாலம்: பயணிகள் அவதி

2


ADDED : ஜன 29, 2024 05:24 AM

Google News

ADDED : ஜன 29, 2024 05:24 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் அருகே பாம்பன் தேசிய நெடுஞ்சாலை பாலத்தில் சாலை சேதம்டைந்து குண்டும், குழியுமாக கிடக்கிறது இதனால் பயணிகள் அவதிப்படுகின்றனர்.

பாம்பன் கடல் மீது அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலை பாலம் 1988ல் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

இப்பாலத்தில் 5 ஆண்டுக்கு ஒருமுறை தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் பராமரித்து வந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக முறையான பராமரிப்பு இன்றி அலங்கோலமாய் கிடக்கிறது.

இதில் பாலத்தில் உள்ள தார் சாலையில் பல இடத்தில் சேதமடைந்து குண்டும், குழியுமாக கிடக்கிறது.

இவ்வழியாக ராமேஸ்வரம் கோயிலுக்கு செல்லும் வாகனங்கள் ' தடதட ' என எழும் ஓசையில் பாலத்தில் ஏதேனும் விபரீதம் நடக்கிறதோ என பயணிகள் அச்சம் அடைகின்றனர்.

இரவில் செல்லும் வாகனங்கள் இப்பள்ளத்தில் சிக்கி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

முக்கியத்துவம் வாய்ந்த பாலத்தின் சாலையை புதுப்பிக்க சமூக ஆர்வலர்கள் பலமுறை வலியுறுத்தியும் அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை.

எனவே பயணிகளுக்கு விபரீதம் ஏற்படுவதற்கு முன் சாலையை சீரமைக்க தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் முன்வர வேண்டும்.






      Dinamalar
      Follow us