ADDED : ஜன 03, 2024 01:10 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் பாம்பன் சின்னபாலம் கடற்கரையில் நேற்று அதிகாலை 5:00 மணிக்கு திடீரென கடல் 500 மீட்டர் வரை உள்வாங்கியது. இதனால் மீன்பிடிக்கச் செல்ல தயாராக இருந்த மீனவர்களின் நாட்டுப்படகுகள் தரை தட்டி நின்றன.
மீனவர்கள் வீடுகளில் முடங்கினர். மாலை 4:00 மணிக்கு பின் கடல்நீர் மட்டம் உயர்ந்ததும் கடற்கரை இயல்பு நிலைக்கு திரும்பியது. சின்னபாலம் கடற்கரை பகுதி பிரேக் வாட்டர் எனும் கடல்நீர் பிடிப்பு பகுதி என்பதால் வடகிழக்கு பருவக்காற்று சீசனில் கடல்நீர் உள்வாங்குவதும் மாலையில் நீர் மட்டம் உயர்வதும் சகஜம் என மீனவர்கள் தெரிவித்தனர்.