sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

ராஜாக்கள் பாளையத்தில் ஆபத்தை ஏற்படுத்தும் சீமைகருவேல மரங்கள் கண்டுகொள்ளாத ஊராட்சி நிர்வாகம்

/

ராஜாக்கள் பாளையத்தில் ஆபத்தை ஏற்படுத்தும் சீமைகருவேல மரங்கள் கண்டுகொள்ளாத ஊராட்சி நிர்வாகம்

ராஜாக்கள் பாளையத்தில் ஆபத்தை ஏற்படுத்தும் சீமைகருவேல மரங்கள் கண்டுகொள்ளாத ஊராட்சி நிர்வாகம்

ராஜாக்கள் பாளையத்தில் ஆபத்தை ஏற்படுத்தும் சீமைகருவேல மரங்கள் கண்டுகொள்ளாத ஊராட்சி நிர்வாகம்


ADDED : மே 07, 2025 01:39 AM

Google News

ADDED : மே 07, 2025 01:39 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிக்கல்: சிக்கல் அருகே ராஜாக்கள் பாளையம் செல்லும் கிராமச்சாலையின் இரு புறங்களிலும் மிகுதியாக வளர்ந்துள்ள சீமைக் கருவேல மரங்களால் விபத்து அபாயம் உள்ள நிலையில் ஊராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளாமல் உள்ளது.

ராஜாக்கள் பாளையத்தில் இருந்து சிக்கல் செல்லும் பிரதான சாலையின் இரு புறங்களிலும் சாலையை மறைத்து சீமைக் கருவேலம் மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளது. இதனால் டூவீலர்களில் வருவோர் சீமை கருவேல மரங்கள் அடர்ந்துள்ளதால் வழி தெரியாமல் நேருக்கு நேர் மோதி விபத்தில் காயம் அடைகின்றனர்.

சிக்கல் அருகே காமராஜர்புரம் நாகராஜ் கூறியதாவது: இந்த ரோட்டில் ஏராளமான பொதுமக்கள் செல்லும் நிலையில் சீமைக் கருவேல மரங்கள் சாலையை முழுவதுமாக ஆக்கிரமித்து வளர்ந்துள்ளது. மாதத்திற்கு பத்திற்கும் அதிகமான விபத்துக்கள் தொடர்ச்சியாக நடக்கிறது. சிறைக்குளம் ஊராட்சி நிர்வாகம் சார்பில் சாலையோர சீமைக் கருவேல மரங்களை அகற்ற வேண்டும். இது குறித்து முறையிட்டும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே கடலாடி யூனியன் அதிகாரிகள் உரிய வழிகாட்டுதலை வழங்க வேண்டும் என்றார்.






      Dinamalar
      Follow us