sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

சேதமான கட்டடத்தில் ஊராட்சி அலுவலகம்

/

சேதமான கட்டடத்தில் ஊராட்சி அலுவலகம்

சேதமான கட்டடத்தில் ஊராட்சி அலுவலகம்

சேதமான கட்டடத்தில் ஊராட்சி அலுவலகம்


ADDED : நவ 12, 2024 04:51 AM

Google News

ADDED : நவ 12, 2024 04:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புல்லாணி: திருப்புல்லாணி அருகே சின்னாண்டி வலசை ஊராட்சி அலுவலகம் சேதமடைந்த கட்டடத்தில் செயல்படுவதால் அலுவலர்கள், மக்கள் விபத்து அச்சத்தில் உள்ளனர்.

சின்னாண்டி வலசை ஊராட்சி அலுவலகம் 1990ல் கட்டப்பட்டு 10 ஆண்டுகளுக்கு முன்பு பராமரிப்பு பணிகள் செய்யப்பட்டது. சின்னாண்டி வலசை, புதுக்கோவில், குமராபுரம், சங்கன்வலசை, வில்லிவலசை, செட்டித்தோட்டம், தோரையன் வலசை, பருதி நிலம், மகுளி வலசை உள்ளிட்ட கிராமங்களில் இருந்து மக்கள் குடிநீர் வரி, சொத்து வரி செலுத்துவதற்காக ஊராட்சி அலுவலகத்திற்கு வருகின்றனர்.

சமீபத்தில் பெய்த மழையால் கட்டடத்தில் நீர்க்கசிவு ஏற்படுகிறது. இதனால் பணியாளர்கள்அச்சத்துடன் பணியாற்றுகின்றனர். அடிக்கடி சிமென்ட் பூச்சுக்கள் பெயர்ந்து விழுகிறது.

சின்னாண்டி வலசை ஊராட்சி தலைவர் சஞ்சய் காந்தி கூறியதாவது:

சேதமடைந்த கட்டடத்தை இடித்து அகற்றிவிட்டு புதிய கட்டடம் அமைக்க வேண்டும். கிராம சபை கூட்டத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. திருப்புல்லாணி யூனியன் அலுவலக அதிகாரிகளுக்கு மனு கொடுத்துள்ளேன் என்றார்.






      Dinamalar
      Follow us