sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க வேண்டும்; ஊராட்சிச் செயலாளர்கள் எதிர்பார்ப்பு

/

ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க வேண்டும்; ஊராட்சிச் செயலாளர்கள் எதிர்பார்ப்பு

ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க வேண்டும்; ஊராட்சிச் செயலாளர்கள் எதிர்பார்ப்பு

ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க வேண்டும்; ஊராட்சிச் செயலாளர்கள் எதிர்பார்ப்பு


ADDED : ஜன 05, 2025 11:50 PM

Google News

ADDED : ஜன 05, 2025 11:50 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கமுதி; ஓய்வூதிய திட்டத்தில் இணைப்பு, காலிப்பணியிடங்கள் நிரப்புதல் ஆகிய பல்வேறு கோரிக்கை தொடர்பான அரசாணை வெளியாகும் என எதிர்பார்த்துள்ளோம், என தமிழ்நாடு ஊராட்சி செயலாளர் சங்கத்தின் மாநில தலைவர் ஜான் போஸ்கோ பிரகாஷ் தெரிவித்தார்.

கமுதி கோட்டைமேட்டில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வளாகத்தில் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் கல்வெட்டு திறப்பு விழா நடந்தது. ஒன்றிய தலைவர் குருமூர்த்தி தலைமை வகித்தார். ஊராட்சி ஒன்றிய தலைவர் தமிழ்ச்செல்வி, பி.டி.ஓ., சந்திரமோகன், மாநில பொதுச் செயலாளர் வேல்முருகன் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் செல்வம் வரவேற்றார்.

மாநில தலைவர் ஜான் போஸ்கோ பிரகாஷ் கல்வெட்டை திறந்து வைத்து அவர் கூறியதாவது, மாவட்ட அளவில் கமுதி ஊராட்சி ஒன்றியத்தில் சங்கத்தின் கல்வெட்டு திறப்பு விழா, கொடியேற்றுதல் நடந்தது.

ஊராட்சி செயலாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையான தமிழக அளவில் காலியாக உள்ள ஊராட்சி செயலாளர் பணியிடங்களை நிரப்புதல், ஓய்வூதிய திட்டத்தில் ஊராட்சி செயலாளர்களை இணைப்பது உள்ளிட்ட கோரிக்கைகள் அரசால் ஏற்கப்பட்டு அது தொடர்பான அரசாணை விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கிறோம்.

இது தொடர்பாக ஊரக வளர்ச்சி துறை இயக்குநர், ஆணையர், தமிழக கூடுதல் தலைமை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம், என்றார்.

உடன் மாநில இணைச்செயலாளர் ஜெயபாரதன் உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us