ADDED : ஏப் 18, 2025 05:37 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கீழக்கரை: கீழக்கரை சாலைத் தெருவில் உள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் கடந்தாண்டு கும்பாபிஷேகம் நடந்தது. இதையடுத்து நடந்த வருடாபிஷேக விழாவில் மூலவர்பத்ரகாளியம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாரதனைகள் நிறைவேற்றப்பட்டது.
மாலை பொங்கல் வைத்தும், அதனை தொடர்ந்து ஏராளமான பெண்கள் பங்கேற்ற விளக்கு பூஜை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை விழாக் குழுவினர் செய்திருந்தனர்.