/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வழிவிடு முருகன் கோயிலில் பங்குனி உத்திர விழா கொடியேற்றம்
/
வழிவிடு முருகன் கோயிலில் பங்குனி உத்திர விழா கொடியேற்றம்
வழிவிடு முருகன் கோயிலில் பங்குனி உத்திர விழா கொடியேற்றம்
வழிவிடு முருகன் கோயிலில் பங்குனி உத்திர விழா கொடியேற்றம்
ADDED : மார் 17, 2024 12:37 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோயிலில் பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு கொடியேற்றம் நடந்தது. பக்தர்கள்காப்புக்கட்டினர்.
ராமநாதபுரம் வழி விடு முருகன் கோயில் காலை 7:00 மணிக்கு அனுஞ்கை விக்னேஷ்வர பூஜை, திருமஞ்சன அபிேஷகம், ரட்சாபந்தனம், துவஜாரோகணம், பக்தர்கள் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது. இன்று (மார்ச் 17) ஆரியவைசியரின் பூச்சொரிதல் நிகழ்ச்சி காலை 10:00 மணிக்கு நடக்கிறது.
விழா நாட்களில் தினமும் கலை நிகழ்ச்சிகள் நாடகம், பரதநாட்டியம், பக்தி இன்னிசை, ஆன்மிக சொற்பொழிவு போன்ற நிகழ்ச்சிகள் நடக்கின்றன. மார்ச் 25ல் காலை 9:30 மணிக்கு நொச்சிவயல் ஊருணிக்கரையில் உள்ள பிரம்புரீஸ்வரர் கோயிலில் இருந்து பால்குடம், பால் காவடி கட்டி கோயிலுக்கு வருதல் மதியம் 1:00 மணிக்கு அபிேஷகம், ஆராதனை நடக்கிறது.
இரவு 7:00 மணிக்கு பூக்குழி வைபவமும், மார்ச் 26ல் இரவு வழிவிடு முருகனின் வீதியுலா நடக்கிறது.

