sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

பரமக்குடி தேசிய நெடுஞ்சாலையோரம் நடைபாதை மாயம்; ஆக்கிரமிப்பால் வீணாகிய ரூ.2 கோடி

/

பரமக்குடி தேசிய நெடுஞ்சாலையோரம் நடைபாதை மாயம்; ஆக்கிரமிப்பால் வீணாகிய ரூ.2 கோடி

பரமக்குடி தேசிய நெடுஞ்சாலையோரம் நடைபாதை மாயம்; ஆக்கிரமிப்பால் வீணாகிய ரூ.2 கோடி

பரமக்குடி தேசிய நெடுஞ்சாலையோரம் நடைபாதை மாயம்; ஆக்கிரமிப்பால் வீணாகிய ரூ.2 கோடி


ADDED : செப் 16, 2024 05:38 AM

Google News

ADDED : செப் 16, 2024 05:38 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பரமக்குடி: பரமக்குடியில் தேசிய நெடுஞ்சாலையோரம் ரூ.2 கோடியில் அமைக்கப்பட்ட நடைமேடை ஆக்கிரமிப்பால் வீணாகிய நிலையில் மாணவர்கள் ஆபத்தான பயணம் செய்கின்றனர்.

பரமக்குடி நகராட்சியில் 36 வார்டுகளில் 1 லட்சத்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். மேலும் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தினமும் வந்து செல்கின்றனர்.

இங்கு போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு ஐந்து முனை ரோடு துவங்கி சவுராஷ்டிரா மேல்நிலைப்பள்ளி வரை இருபுறங்களிலும் நடைமேடை அமைக்கப்பட்டது. தேசிய நெடுஞ்சாலையில் மழைநீர் தேங்குவதை தடுக்கும் வகையில் மழை நீர் வடிகால் அமைக்கப்பட்டுள்ளது.

இதற்காக ரூ.2 கோடியில் கட்டப்பட்ட மழைநீர் வடிகாலுடன் கூடிய நடைமேடை கட்டிய நாள் முதல் ஆக்கிரமிப்பால் நிறைந்துள்ளது. இதனால் ரோட்டில் செல்லும் பாதசாரிகள், பள்ளி மாணவர்கள் என மீண்டும் ஆபத்தான பயணம் செய்கின்றனர்.

பரமக்குடி சப்-கலெக்டர் அபிலாஷா கவுர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பஸ் ஸ்டாண்ட், பெரிய பஜார், தேசிய நெடுஞ்சாலையில் ஆய்வு மேற்கொண்டு விரைவில் ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். ஆனால் அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளதால் ஒரே நேரத்தில் பள்ளி முடிந்து செல்லும் மாணவர்கள் ஆபத்தை எதிர்நோக்கி செல்கின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us