sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

எட்டு கரத்துடன் காளி அலங்காரத்தில் பரமக்குடி முத்தால பரமேஸ்வரி

/

எட்டு கரத்துடன் காளி அலங்காரத்தில் பரமக்குடி முத்தால பரமேஸ்வரி

எட்டு கரத்துடன் காளி அலங்காரத்தில் பரமக்குடி முத்தால பரமேஸ்வரி

எட்டு கரத்துடன் காளி அலங்காரத்தில் பரமக்குடி முத்தால பரமேஸ்வரி


ADDED : ஏப் 08, 2025 05:40 AM

Google News

ADDED : ஏப் 08, 2025 05:40 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பரமக்குடி: பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மன் கோயில் பங்குனி விழாவில் காளி அலங்காரத்தில் அம்மன் உலா வந்தார்.

இக்கோயிலில் ஏப்.,3ல் கொடி மரத்தில் சிங்கக்கொடி ஏற்றப்பட்டு பங்குனி விழா துவங்கி நடக்கிறது. முக்கிய விழாவாக நேற்று காலை அம்மன் 8 கரத்துடன் சுடர் கிரீடம் தாங்கி காளி அலங்காரமாகினார்.

கைகளில் சங்கு, சக்கரம், உடுக்கை, வாள், சூலம், நாகம் ஏந்தியபடி நடன கோலத்தில் இருந்தார்.

காலை 11:00 மணிக்கு சிறப்பு தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டு கோயிலில் இருந்து புறப்பாடாகினார். முக்கிய வீதிகள் வழியாக சென்ற அம்மன் சின்னக்கடை வீதியில் வன்னியகுல சத்திரிய மகாசபையின் மண்டகப்படியில் அமர்ந்தார்.

அங்கு மதியம் 2:00 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

பின்னர் இரவு அம்மன் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி கோயிலை அடைந்தார். குழந்தைகள், பெரியவர்கள் பல்வேறு அம்மன் மற்றும் சுவாமிகளின் வேடம் அணிந்து வந்தனர்.






      Dinamalar
      Follow us