sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

பஸ்சில் செயல்படாத டிஜிட்டல் போர்டால் பயணிகள் குழப்பம்

/

பஸ்சில் செயல்படாத டிஜிட்டல் போர்டால் பயணிகள் குழப்பம்

பஸ்சில் செயல்படாத டிஜிட்டல் போர்டால் பயணிகள் குழப்பம்

பஸ்சில் செயல்படாத டிஜிட்டல் போர்டால் பயணிகள் குழப்பம்


ADDED : பிப் 03, 2025 05:05 AM

Google News

ADDED : பிப் 03, 2025 05:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாடானை: அரசு பஸ்சின் பின்பக்கம் டிஜிட்டல் போர்டு செயல்படாததால் பஸ் எந்த ஊருக்கு செல்கிறது என்பது தெரியாமல் பயணிகள் குழப்பம் அடைந்தனர்.

நேற்று அதிகாலை திருச்சி-ராமேஸ்வரம் செல்லும் டி.என். 63-1821 என்ற பதிவு எண் கொண்ட அரசு பஸ் திருவாடானை பஸ்ஸ்டாண்டில் நின்றது. பஸ்சின் பின்பக்கமாக உள்ள டிஜிட்டல் போர்டு செயல்படாமல் இருந்தது. பஸ் புறப்படும் நேரத்தில் சென்ற பயணிகள் அவசரமாக ஏறுவதற்காக போர்டை பார்த்தால் எந்த ஊருக்கு செல்கிறது என்று தெரியவில்லை.

இதனால் சிலர் முன்பக்கமாக சென்றும், சிலர் பஸ்சில் அமர்ந்திருந்தவர்களிடம் கேட்டு தெரிந்தும் பஸ்சில் ஏறினர். இது குறித்து பயணிகள் கூறியதாவது:

கோவை போன்ற பல நகரங்களில் தானியங்கி குரல் ஒலிப்பு கருவி மூலம் எந்த ஊருக்கு பஸ் செல்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

இந்த வசதியை அனைத்து நகரங்களுக்கும் செயல்படுத்த வேண்டும். படிக்க தெரியாதவர்கள் குரல் ஒலிப்பு சத்தம் கேட்டு பஸ்சில் ஏறி பயணம் செய்யலாம் என்றனர்.






      Dinamalar
      Follow us