/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
நிறுத்திய பஸ்சை மீண்டும் இயக்க பயணிகள் கோரிக்கை
/
நிறுத்திய பஸ்சை மீண்டும் இயக்க பயணிகள் கோரிக்கை
ADDED : ஜூன் 10, 2025 01:14 AM
தொண்டி: தொண்டியிலிருந்து குமுளிக்கு இயங்கிய அரசு பஸ் நிறுத்தபட்டது. அந்த பஸ்சை மீண்டும் இயக்க மக்கள் வலியுறுத்தினர்.
தொண்டியிலிருந்து காலை 9:15 மணிக்கு திருவாடானை வழியாக குமுளிக்கு அரசு பஸ் இயங்கி வந்தது. குறிப்பிட்ட சில பஸ் ஸ்டாப்புகளில் மட்டும் நிறுத்தபட்டதால் சீக்கிரமாக மதுரை செல்ல விரும்பும் பயணிகள், இந்த பஸ்சில் பயணம் செய்தனர். இந்நிலையில் மூன்று மாதங்களாக குமுளி பஸ்சை நிறுத்தி விட்டனர்.
இது குறித்து தொண்டி மாலிக் கூறுகையில், தொண்டியில் இருந்து மதுரைக்கு இரண்டரை மணி நேரத்தில் குமுளி பஸ் சென்று விடும். இந்த பஸ் நிறுத்தபட்டதால் சிரமம் ஏற்பட்டுள்ளது.
ஆகவே மதுரை- குமுளி பஸ்சை மீண்டும் இயக்க அரசு போக்குவரத்து அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.