/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடி ரயில்வே ஸ்டேஷனில் பள்ளங்களால் பயணிகள் அவதி பணிகள் தாமதத்தால் தடுமாற்றம்
/
பரமக்குடி ரயில்வே ஸ்டேஷனில் பள்ளங்களால் பயணிகள் அவதி பணிகள் தாமதத்தால் தடுமாற்றம்
பரமக்குடி ரயில்வே ஸ்டேஷனில் பள்ளங்களால் பயணிகள் அவதி பணிகள் தாமதத்தால் தடுமாற்றம்
பரமக்குடி ரயில்வே ஸ்டேஷனில் பள்ளங்களால் பயணிகள் அவதி பணிகள் தாமதத்தால் தடுமாற்றம்
ADDED : பிப் 19, 2024 06:17 AM

பரமக்குடி, : -பரமக்குடி ரயில்வே ஸ்டேஷனில் பல்வேறு திட்டப் பணிகள் நிறைவேற்றப்பட்டு வரும் நிலையில் பள்ளங்கள் தோண்டப்பட்டு பணிகள்தாமதமாக நடப்பதால் பயணிகள் அவதிக்குஉள்ளாகின்றனர்.
மதுரை கோட்டத்தில் ராமேஸ்வரம் மார்க்கத்தில்அதிக வருமானம் தரும் ரயில் நிலையமாக பரமக்குடி விளங்குகிறது. இங்கு பரமக்குடி சுற்றுவட்டார கிராமங்கள் மட்டுமல்லாது, அருகில் உள்ள முதுகுளத்துார், சாயல்குடி மற்றும் சிவகங்கை மாவட்டம் இளையான்குடி உள்ளிட்ட பகுதி மக்களும் பயன்படுத்துகின்றனர்.
இந்நிலையில் அடிப்படை வசதிகள் குறித்து தொடர்ந்து தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டு வருகிறது. இதனை அடுத்து ஸ்டேஷனில் பயணிகள் வசதிக்காக லிப்ட், மின் விளக்குகள் மற்றும் அதிவேக ரயில்களின் பெட்டிகளை கண்டறிய கோச் எண் போர்டுகள் பொருத்தப்பட்டுள்ளன.
மேலும் வயர்களை பதித்து செல்வதற்கு ஸ்டேஷன் மற்றும் வெளிப்பகுதிகள் முழுவதும் தொடர்ச்சியாக குழிகள் தோண்டப்பட்டு பத்து நாட்களுக்கு மேலாக பணிகள் நடக்காமல் உள்ளது. இதனால் பகல், இரவு நேரங்களில் ஸ்டேஷனுக்கு வரும் பயணிகள் அவ்வப்போது தடுமாறி விழுகின்றனர்.
இதேபோல் வாகனங்கள்ஸ்டேஷன் வளாகத்திற்குள் செல்ல முடியாத நிலை உள்ளது. ஆகவே பள்ளங்களை முறையாக மூட சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

