sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

அரசு பஸ்சில் ஏ.சி., இயங்காததால் காற்றின்றி மூச்சு முட்டிய பயணிகள்

/

அரசு பஸ்சில் ஏ.சி., இயங்காததால் காற்றின்றி மூச்சு முட்டிய பயணிகள்

அரசு பஸ்சில் ஏ.சி., இயங்காததால் காற்றின்றி மூச்சு முட்டிய பயணிகள்

அரசு பஸ்சில் ஏ.சி., இயங்காததால் காற்றின்றி மூச்சு முட்டிய பயணிகள்


ADDED : பிப் 12, 2024 04:44 AM

Google News

ADDED : பிப் 12, 2024 04:44 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் இருந்து மதுரைக்கு இயக்கப்பட்ட அரசு பஸ்சில் ஏ.சி., இயங்கவில்லை. பஸ்சுக்குள் காற்று வராமல் மூடப்பட்டதால் பயணிகள் மூச்சு முட்டியபடி பயணித்து சிரமப்பட்டனர்.

ராமநாதபுரத்தில் இருந்து மதுரைக்கு அரசு ஏ.சி., பஸ்கள் இயக்கப்பட்டுகின்றன. இந்த பஸ்கள் முறையான பராமரிப்பு செய்யப்படாமல் ஏ.சி., இயங்காததால் பயணிகள் கண்டக்டருடன் இரு மாதங்களுக்கு முன் தகராறு செய்தனர். டி.என். 63 என் 2040 என்ற பதிவெண் கொண்ட பஸ் ராமநாதபுரத்தில் இருந்து நேற்று காலை 11:30 மணிக்கு மதுரைக்கு இயக்கப்பட்டது. ஏ.சி., இயங்கவில்லை.

இதன் காரணமாக பஸ்சுக்குள் காற்று வராததால் 30 க்கும் மேற்பட்ட பயணிகள் மூச்சு முட்டும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.

இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப் படுவதில்லை. ராமநாதபுரம்-மதுரைக்கு ரூ.130க்கு கட்டணம் வசூலிக்கின்றனர். பயணிகள் நலன் கருதி இனி வரும் காலங்களிலாவது அரசு ஏ.சி., பஸ்கள் முறையாக பராமரிப்பு செய்து இயக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தினர்.






      Dinamalar
      Follow us