நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நுாறுக்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து தினமும் ஏராளமான நோயாளிகள் வந்து செல்கின்றனர்.
மருத்துவமனை நுழைவுப் பகுதி ரோடு பல மாதங்களாக சேதமடைந்த நிலையில் லேசான மழை பெய்தாலே மருத்துவமனை நுழைவுப் பகுதி சேறும் சகதியாக மாறி விடுகிறது.
இதனால் நோயாளிகள் பாதிக்கப்படுகின்றனர். ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் வரும் முதியவர்களும், கர்ப்பிணிகளும் சிரமப்படுகின்றனர். எனவே கட்டடங்களுக்கு செல்லும் வழியில் சேதமடைந்த ரோட்டில் உள்ள பள்ளங்களை சீரமைக்க மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.