/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வடிகால் வசதியின்றி தேங்கும் மழைநீரால் நோயாளிகள் தவிப்பு:; மருத்துவக்கல்லுாரி மருத்துமனையில் அவலம்
/
வடிகால் வசதியின்றி தேங்கும் மழைநீரால் நோயாளிகள் தவிப்பு:; மருத்துவக்கல்லுாரி மருத்துமனையில் அவலம்
வடிகால் வசதியின்றி தேங்கும் மழைநீரால் நோயாளிகள் தவிப்பு:; மருத்துவக்கல்லுாரி மருத்துமனையில் அவலம்
வடிகால் வசதியின்றி தேங்கும் மழைநீரால் நோயாளிகள் தவிப்பு:; மருத்துவக்கல்லுாரி மருத்துமனையில் அவலம்
ADDED : அக் 14, 2024 07:57 AM

ராமநாதபுரம் : -ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் போதிய வடிகால் வசதியின்றி மழை நீர் தெப்பக்குளம் போல தேங்கி கிடப்பதால் நோயாளிகள் சிரமப்படுவது வாடிக்கையாகியுள்ளது.
ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு நகர், கிராமப்புறங்களில் இருந்து ஏராளமான நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். உள் நோயாளிகளாக 500 க்கும் மேற்பட்டவர்கள் தங்கி சிகிச்சை பெறுகின்றனர். அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப்பிரிவுக்கு தனியாகவும், அவசர சிகிச்சை பிரிவு, எலும்பு முறிவு பிரிவு, கண் மருத்துவப்பிரிவு, காது, மூக்கு, தொண்டை பிரிவு, இதய சிகிச்சை பிரிவு, பல் மருத்துவப்பிரிவு, என அனைத்து சிறப்பு சிகிச்சை பிரிவுகளும் இயங்கி வருகின்றன.
நோயாளிகளின் உறவினர்கள் தினமும் ஏராளமானவர்கள் வருகின்றனர். இம்மருத்துவமனையில் போதிய வடிகால்வசதியின்றி மழைபெய்தால் தண்ணீர் குளம்போல தேங்குவது தொடர்கதையாக உள்ளது. இதனால் நோயாளிகளை அவசரத்திற்கு அழைத்து செல்ல முடியாத நிலை உள்ளது. மழை நேரத்தில் நீர் தேங்கும் போது புகாரின் பெயரில் வாகனத்தில் உறிஞ்சி தண்ணீரை அகற்றுகின்றனர். அதன்பிறகு மழைபெய்தால் மீண்டும் தண்ணீர் தேங்குகிறது. எனவே இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும்.
----