ADDED : ஜூலை 15, 2025 10:53 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்; ராமநாதபுரத்தில் மாவட்ட அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே ஆர்பாட்டம் நடந்தது.
மாவட்டத்தலைவர் கிருஷ்ணன், செயலாளர் விஜயராகவன், துணைத் தலைவர்கள் ராஜேந்திரன், முகமது சீது பங்கேற்றனர். வருங்கால வைப்புநிதி ஓய்வூதியர்களுக்கு வரையறுக்கப்பட்ட பென்ஷன் வழங்க வேண்டும். மாநில அரசு ஊதியக்குழு அமைத்து மத்திய அரசின் 8 வது ஊதியக்குழுவின் பயன்களை ஓய்வூதியர்களுக்க வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர்.