ADDED : ஆக 19, 2026 11:45 PM

அ நிறம் | அளவு
ராமநாதபுரம்: ராமநாதபுரம் தலைமை அஞ்சல் அலுவலகம் முன்பு ஓய்வூதியர்கள் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அகில இந்திய அஞ்சல் ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் நாகநாராயணன் தலைமை வகித்தார். செயலாளர் இஸ்தாதீன் முன்னிலை வகித்தார்.
இதில் முடக்கப்பட்ட பஞ்சப்படியை உடனே வழங்குவது, பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்துவது, மெடிக்கல் அலவன்ஸ் உயர்த்தி வழங்குவது உள்ளிட்ட 15 கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷ மிட்டனர்.
நிகழ்ச்சியில் உப தலைவர் சண்முகராஜ், உபசெயலாளர் ராஜீவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
