/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சேதமடைந்த ஆபத்தான நிலையில் பழைய கட்டடத்தால் மக்கள் அச்சம்
/
சேதமடைந்த ஆபத்தான நிலையில் பழைய கட்டடத்தால் மக்கள் அச்சம்
சேதமடைந்த ஆபத்தான நிலையில் பழைய கட்டடத்தால் மக்கள் அச்சம்
சேதமடைந்த ஆபத்தான நிலையில் பழைய கட்டடத்தால் மக்கள் அச்சம்
ADDED : பிப் 03, 2025 05:11 AM

முதுகுளத்துார்: முதுகுளத்துார் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் பழைய கட்டடம் சேதமடைந்து ஆபத்தான நிலையில் இருப்பதால் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் அச்சப்படுகின்றனர்.
முதுகுளத்துார் போலீஸ் ஸ்டேஷன் அருகே ஊராட்சி ஒன்றிய அலுவலகம் செயல்படுகிறது. இங்கு பல ஆண்டுகளுக்கு முன்பு உள்ள கட்டடம் சேதமடைந்துள்ளதால் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது. இங்கு முதுகுளத்துார் ஒன்றியத்திற்கு உட்பட்ட 46 ஊராட்சிகளை சேர்ந்த மக்கள் பல்வேறு பணிகளுக்காக அலுவலக வேலை நாட்களில் வந்து செல்கின்றனர்.
இந்த வளாகத்திக்குள் சார்நிலை கருவூலம், ஒருங்கிணைந்த குழந்தைகள் நல அலுவலகம், உதவி செயற்பொறியாளர் அலுவலகம், மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 200க்கும் மேற்பட்டோர் பணி செய்கின்றனர்.
இங்கு பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பழைய கட்டடம் பயன்பாடின்றி சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் நிழலுக்காக இந்த கட்டடம் அருகே காத்திருக்கின்றனர். டூவீலர், கார்களை நிறுத்துகின்றனர். இதனால் அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன் கட்டடத்தை இடித்து அகற்ற வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.