/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
நாய் தொல்லையால் மக்கள் அச்சம்: எப்ப சார் நடவடிக்கை எடுப்பீங்க
/
நாய் தொல்லையால் மக்கள் அச்சம்: எப்ப சார் நடவடிக்கை எடுப்பீங்க
நாய் தொல்லையால் மக்கள் அச்சம்: எப்ப சார் நடவடிக்கை எடுப்பீங்க
நாய் தொல்லையால் மக்கள் அச்சம்: எப்ப சார் நடவடிக்கை எடுப்பீங்க
ADDED : மே 08, 2025 02:32 AM

முதுகுளத்துார்: முதுகுளத்துார் - கடலாடி ரோடு வேளாண் கூட்டுறவு வங்கி அருகே நாய்கள் கூட்டமாக உலா வருவதால் மக்கள் அச்சப்படுகின்றனர்.
முதுகுளத்துார் பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகளில் உள்ள 50க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளது. இப்பகுதியில் கடந்த சில மாதங்களாக தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
தெருக்களில் கூட்டமாக நாய்கள் உலா வருவதால் மக்கள் அச்சப்படுகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு நாய் கடித்ததில் 2 வயது குழந்தை காயமடைந்துள்ளது.
10க்கும் மேற்பட்ட ஆடுகள் உயிரிழந்தன. இது குறித்து தினமலர் நாளிதழில் பலமுறை செய்தி வெளியிட்டும் பேரூராட்சி நிர்வாகத்தினர் அலட்சியம் காட்டி வருகின்றனர்.
இதனால் தெருக்களில் தொடர்ந்து நாய்கள் கூட்டமாக உலா வருவதால் மக்கள் ஒருவித அச்சத்துடன் உள்ளனர்.
எனவே முதுகுளத்துாரில் நாய் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.