/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கூட்டமாக திரியும் நாய்களால் மக்கள் அச்சம்
/
கூட்டமாக திரியும் நாய்களால் மக்கள் அச்சம்
ADDED : செப் 23, 2025 11:44 PM
முதுகுளத்துார்; முதுகுளத்துார் அபி ராமம் ரோடு செல்வநாயகபுரம் அருகே ரோட்டில் நாய்கள் கூட்டமாக திரிவதால் வாகன ஓட்டிகள், மக்கள் அச்சப்படுகின்றனர்.
முதுகுளத்துார் பேரூராட்சி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. முதுகுளத்துார் கீழரத வீதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அருகே நாய்கள் கூட்டமாக திரிகின்றன. இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், பொதுமக்கள் அச்சப்படுகின்றனர்.
முதுகுளத்துார் அபிராமம் ரோடு செல்வநாயகபுரம் அருகே ரோட்டை மறைத்து பத்துக்கு மேற்பட்ட நாய்கள் கூட்டமாக திரிகின்றன.
தனியாக நடந்து செல்பவர்களை அச்சுறுத்தும் வகையில் இவை ஒன்று சேர்ந்து குரைக்கின்றன. டூவீலரில் செல்பவர்களையும் தெருநாய்கள் விரட்டி கடிக்க பாய்கின்றன.
இதனால் நடந்து செல்வதற்கே மக்கள் அச்சப்படுகின்றனர். எனவே ஏதாவது அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன் தெருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.