sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

தோட்டக்கலை பண்ணைக்கு வழிதெரியாமல் மக்கள் அவதி

/

தோட்டக்கலை பண்ணைக்கு வழிதெரியாமல் மக்கள் அவதி

தோட்டக்கலை பண்ணைக்கு வழிதெரியாமல் மக்கள் அவதி

தோட்டக்கலை பண்ணைக்கு வழிதெரியாமல் மக்கள் அவதி


ADDED : ஏப் 15, 2025 05:36 AM

Google News

ADDED : ஏப் 15, 2025 05:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாடானை: திருவாடானை அருகே ஓரியூர் அரசு தோட்டக்கலை பண்ணையில் மரக்கன்றுகள் வாங்க செல்வதற்கு, வழிகாட்டும் அறிவிப்பு பலகை இல்லாததால் மக்கள் சிரமப்படுகின்றனர்.

திருவாடானை அருகே ஓரியூரில் 2018 ல் அரசு தோட்டக்கலை பண்ணை 36 ஏக்கரில் துவங்கபட்டது. 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர்.

நிழல் குடில், அமைத்து பல்வேறு வகையான மரக்கன்றுகள் வளர்க்கபட்டு குறைந்த விலையில் விவசாயிகளுக்கு வழங்கபட்டு வருகிறது. விவசாயிகள் சென்று பழக்கன்றுகளை வாங்கி பயன் அடைகின்றனர்.

ஓரியூரிலிருந்து எஸ்.பி.பட்டினம் செல்லும் விலக்கு ரோட்டிலிருந்து 2 கி.மீ.,ல் தோட்டக்கலை பண்ணை உள்ளது. இப் பண்ணைக்கு செல்லும் மக்கள் விலக்கு ரோட்டில் நின்று கொண்டு வழி தெரியாமல் திண்டாடுகின்றனர். உடனடியாக வழிகாட்டும் பலகை வைக்க வேண்டும்.

இது குறித்து ஓரியூர் மக்கள் கூறுகையில், தோட்டக்கலை பண்ணை அமையும் போது வழிகாட்டும் பலகை இருந்தது. சில மாதங்களுக்கு முன்பு பலத்த காற்றில் சாய்ந்தது.

அதை எடுத்து சென்ற அலுவலர்கள் மீண்டும் வைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் வெளியூர்களிலிருந்து வருபவர்கள் வழி தெரியாமல் சிரமம் அடைந்துள்ளனர். அந்தபக்கமாக வாகனங்களில் செல்பவர்களிடம் தோட்டக்கலை பண்ணை எங்கு உள்ளது என்று கேட்டு செல்கின்றனர் என்றனர்.






      Dinamalar
      Follow us