/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தண்ணீரில் கழிவுநீர் கலந்து வருவதால் மக்கள் அச்சம்
/
தண்ணீரில் கழிவுநீர் கலந்து வருவதால் மக்கள் அச்சம்
ADDED : அக் 13, 2024 04:30 AM

முதுகுளத்துார்: முதுகுளத்துார் பேரூராட்சி 6-வது வார்டில் பேரூராட்சி சார்பில் திறந்து விடப்படும் தண்ணீரில் துர்நாற்றுத்துடன் கழிவுநீர் கலந்து வருவதால் மக்கள் அச்சப்படுகின்றனர்.
முதுகுளத்துார் பேரூராட்சி 6-வது வார்டு செல்லிஅம்மன் கோயில் தெரு, பஜார் தெரு, ஊரணி தெரு உட்பட 5க்கும் மேற்பட்ட தெருக்களில் 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். அத்தியாவசிய தேவைக்காக பேரூராட்சி சார்பில் தினந்தோறும் சுழற்சி முறையில் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
இந்நிலையில் ஒருசில நாட்களாக திறந்து விடப்படும் தண்ணீரில் துர்நாற்றத்துடன் கழிவுநீர் கலந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். ஒருசில பகுதிகளுக்கு மட்டும் இதுபோன்று வருவதால் அத்தியாவசிய தேவைக்கு பயன்படுத்துவதற்கு பொதுமக்கள் தயக்கம் காட்டுகின்றனர்.
இதுபோன்ற தண்ணீரை பயன்படுத்துவதால் பொதுமக்களுக்கு டைபாய்டு, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளது. இதனால் அத்தியாவசிய தேவைக்கு டிராக்டர் தண்ணீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தும் நிலை உள்ளது.
எனவே பேரூராட்சி அதிகாரிகள் தண்ணீர் திறந்து விடப்படும் பைப்லைன்களை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
---