sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

கமுதிக்கு இரவு நேரத்தில் பஸ் இல்லாமல் மக்கள் தவிப்பு

/

கமுதிக்கு இரவு நேரத்தில் பஸ் இல்லாமல் மக்கள் தவிப்பு

கமுதிக்கு இரவு நேரத்தில் பஸ் இல்லாமல் மக்கள் தவிப்பு

கமுதிக்கு இரவு நேரத்தில் பஸ் இல்லாமல் மக்கள் தவிப்பு


ADDED : ஏப் 22, 2025 05:43 AM

Google News

ADDED : ஏப் 22, 2025 05:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முதுகுளத்துார்: முதுகுளத்துாரில் இருந்து கமுதிக்கு இரவு 8:30 மணிக்கு மேல் பஸ் வசதி இல்லாததால் மக்கள் தவிக்கின்றனர்.

கமுதி அதனை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமானோர் ராமநாதபுரம், முதுகுளத்துார் அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை செய்கின்றனர். மீண்டும் பணி முடிந்து திரும்பி செல்வதற்காக ராமநாதபுரத்தில் இருந்து வரும் இரவில் பஸ்சில் முதுகுளத்துார் வருகின்றனர்.

இரவு 8:30 மணிக்கு முதுகுளத்துாரில் இருந்து கமுதி வழியாக அருப்புக்கோட்டைக்கு கடைசி பஸ் இயக்கப்படுகிறது. அதற்குப் பிறகு பஸ்கள் இல்லை. இதனால் இரவில் பணி முடிந்து வரும் அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் கமுதிக்கு செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர்.

கமுதி அதனை சுற்றியுள்ள பகுதி மக்கள் இரவில் பஸ் வசதி இல்லாமல் தவிக்கின்றனர். கூடுதல் பணம் செலவு செய்து ஆட்டோவில் செல்லும் அவலநிலை உள்ளது. எனவே முதுகுளத்துாரில் இருந்து கமுதிக்கு இரவில் பஸ் வசதி ஏற்படுத்தி கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.






      Dinamalar
      Follow us