sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

கொக்கூரணியில் காவிரி திட்ட குடிநீரின்றி மக்கள் அவதி

/

கொக்கூரணியில் காவிரி திட்ட குடிநீரின்றி மக்கள் அவதி

கொக்கூரணியில் காவிரி திட்ட குடிநீரின்றி மக்கள் அவதி

கொக்கூரணியில் காவிரி திட்ட குடிநீரின்றி மக்கள் அவதி


ADDED : மார் 11, 2024 05:16 AM

Google News

ADDED : மார் 11, 2024 05:16 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆர்.எஸ்.மங்கலம்,: ஆர்.எஸ்.மங்கலம் அருகே கொக்கூரணி கிராமத்தில் காவிரி குடிநீர் வராமல் மக்கள் பாதுகாப்பாற்ற குடிநீரை விலைக்கு வாங்கி சிரமப்படுகின்றனர்.

காவனக்கோட்டை ஊராட்சியை சேர்ந்த கொக்கூரணி கிராமத்தில் ஏராளமானவர்கள் வாழ்கின்றனர். இங்கு ஊருணிகளோ, குடிநீர் ஆதாரங்களோ இல்லை. முழுமையாக காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தை மட்டுமே மக்கள் நம்பியுள்ளனர். இந்நிலையில், கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக காவிரி கூட்டு குடிநீர் வரவில்லை. வெளியூர்களிலிருந்து விற்பனை செய்யப்படும் பாதுகாப்பற்ற குடிநீரை குடம் ரூ.12 வரை கொடுத்து வாங்கி பயன்படுத்தும் அவல நிலையில் உள்ளனர்.

சிலர் தங்களது டூவீலர் உள்ளிட்ட வாகனங்களில், நான்கு கி.மீ., தொலைவில் உள்ள தேசிய நெடுஞ்சாலை பகுதிக்கு சென்று அப்பகுதியில் தண்ணீர் பிடிக்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கொக்கூரணி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us