sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

விலைக்கு குடிநீர் வாங்கி பயன்படுத்தும் மக்கள்: மனு கொடுத்தும் பயனில்லை அமைச்சர் தொகுதியில் அவலம்

/

விலைக்கு குடிநீர் வாங்கி பயன்படுத்தும் மக்கள்: மனு கொடுத்தும் பயனில்லை அமைச்சர் தொகுதியில் அவலம்

விலைக்கு குடிநீர் வாங்கி பயன்படுத்தும் மக்கள்: மனு கொடுத்தும் பயனில்லை அமைச்சர் தொகுதியில் அவலம்

விலைக்கு குடிநீர் வாங்கி பயன்படுத்தும் மக்கள்: மனு கொடுத்தும் பயனில்லை அமைச்சர் தொகுதியில் அவலம்


ADDED : மே 03, 2025 05:38 AM

Google News

ADDED : மே 03, 2025 05:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முதுகுளத்துார் : முதுகுளத்துார் அருகே தட்டானேந்தல் கிராமத்தில் காவிரி குடிநீர் வசதி இல்லாததால் டிராக்டர் தண்ணீரை விலைக்கு வாங்கி பயன்படுத்துவதால் மக்கள் சிரமப்படுகின்றனர். அமைச்சர் ராஜ கண்ணப்பன் தொகுதியில் மக்கள் அவதிப்படுகின்றனர்.

முதுகுளத்துார் அருகே தட்டானேந்தல் கிராமத்தில் 120க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இங்கு கடந்த பல ஆண்டுகளாக காவிரி குடிநீர் வசதி இல்லை. கிராமத்தில் அமைக்கப்பட்ட காவிரி குடிநீர் குழாய் பராமரிப்பின்றி உள்ளது.

தினந்தோறும் ஒரு குடம் குடிநீர் ரூ.15க்கு விலைக்கு வாங்கி பயன்படுத்துகின்றனர். டிராக்டர் தண்ணீருக்காக தினந்தோறும் காத்திருப்பதால் மக்கள் அத்தியாவசிய வேலைக்கும் மாணவர்கள் பள்ளி, கல்லுாரி செல்ல முடியாமல் தவிக்கின்றனர். இதுகுறித்து பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

எனவே கிராமத்திற்கு காவிரி குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர். அமைச்சர் ராஜகண்ணப்பன் தொகுதியில் அவலநிலை காவிரி குடிநீருக்காக மக்கள் தவம் கிடக்கின்றனர்.






      Dinamalar
      Follow us