/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் மக்கள் அதிருப்தி! ஒரு வழிப்பாதையில் சிலருக்கு மட்டும் அனுமதி
/
அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் மக்கள் அதிருப்தி! ஒரு வழிப்பாதையில் சிலருக்கு மட்டும் அனுமதி
அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் மக்கள் அதிருப்தி! ஒரு வழிப்பாதையில் சிலருக்கு மட்டும் அனுமதி
அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் மக்கள் அதிருப்தி! ஒரு வழிப்பாதையில் சிலருக்கு மட்டும் அனுமதி
ADDED : ஜூலை 05, 2024 10:57 PM

ராமநாதபுரம் : ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் திருட்டை தடுக்க பாதுகாப்பை கருத்தில் கொண்டு நுழைவுப்பகுதியை ஒரு வழிப்பாதையாக்கிய நிர்வாகம், அவ்வழியாக சிலரை மட்டும் அனுமதிப்பது ஏன், என பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் நிறுத்தப்பட்டிருந்த மருத்துவமனையில் பாதுகாவலர் உட்பட பலரது டூவீலர்கள் தொடர்ந்து திருடப்பட்டுள்ளது. இது போக பலரிடம் அலைபேசி, பணம் போன்ற திருட்டுகள் அரசு மருத்துவமனையில் தொடர்ந்து நடந்து வருகிறது. இது குறித்து புகார் கொடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்காமல் போலீசார் இழுத்தடிப்பு செய்கின்றனர்.
இம்மருத்துவமனைக்கு கீழ் பகுதி, மேல் பகுதி என இரண்டு நுழைவு வாயில்கள் உள்ளன. தற்போது பாதுகாப்பு காரணங்களுக்காக பழைய கட்டடத்தில் கீழ் பகுதியில் உள்ள நுழைவாயில் பாதை மற்றும் மகப்பேறு பிரிவிற்கு செல்லும் வழியில் தடுப்புகள் வைத்து கயிறுகட்டியுள்ளனர்.
இவ்வழியில் எந்த வாகனங்களுக்கும் செல்வதற்கு அனுமதியில்லை என்கின்றனர். அதே பாதையில் பலரது பைக்கள் செல்கின்றன. வேண்டியவர், வேண்டாதவர் பார்த்து வாகனங்களை அனுமதிக்கின்றனர். இதனால் பொதுமக்கள் அரசு மருத்துவமனை நிர்வாகம் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர். பாதையை அடைத்தால் அனைவருக்கும் அடைக்கப்பட வேண்டும். ஒரு சிலரை மட்டும் அனுமதிப்பது எந்த வகையில் நியாயமாகும்.
ஒரு வழிப்பாதை இருந்தால் தான் அரசு மருத்துவமனைக்குள் வந்து செல்லும் வாகனங்கள் பற்றியும், யார், யார் வருகை தருகின்றனர் என்பது தெரியவரும். அரசு மருத்துவமனை நிர்வாகம் எடுத்த நடவடிக்கை சரியாக இருந்தாலும் அதனை முறையாக கடைப்பிடிக்க முன்வர வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.