sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

பெரியகண்மாயில் மீன் பிடிக்கும் பணி ஜரூர்: ரூ.7லட்சத்திற்கு ஏலம்

/

பெரியகண்மாயில் மீன் பிடிக்கும் பணி ஜரூர்: ரூ.7லட்சத்திற்கு ஏலம்

பெரியகண்மாயில் மீன் பிடிக்கும் பணி ஜரூர்: ரூ.7லட்சத்திற்கு ஏலம்

பெரியகண்மாயில் மீன் பிடிக்கும் பணி ஜரூர்: ரூ.7லட்சத்திற்கு ஏலம்


ADDED : செப் 30, 2024 04:36 AM

Google News

ADDED : செப் 30, 2024 04:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ். மங்கலம் பெரிய கண்மாயில் ரூ.7 லட்சத்திற்கு ஏலம்விடப்பட்டுள்ள மீன்களை பிடிக்கும் பணி மும்முரமாக நடக்கிறது.

ஆர்.எஸ். மங்கலம் பெரிய கண்மாயில் தேங்கியிருந்த தண்ணீரை விவசாயிகள் கோடை விவசாயத்திற்கு பயன்படுத்தியது போக, குறைந்த அளவிலான தண்ணீர் மட்டுமே தேங்கி இருந்தது.

மழையின்றி வறட்சியின் காரணமாக, கண்மாயில் தேங்கியிருந்த தண்ணீர் விரைவாக காலியாகி தாழ்வான பள்ளங்களில் மட்டுமே தேங்கி இருந்தன.

கடந்த ஆண்டு வைகை ஆற்றில் இருந்து பெரிய கண்மாய்க்கு தண்ணீர் கொண்டு வரப்பட்டதால், கண்மாயில் ஏராளமான மீன்கள் வளர்ச்சி அடைந்திருந்தன. பாசன விவசாயிகள் சார்பில், தாலுகா அலுவலகத்தில் மீன்கள் ஏலம் விடப்பட்டன. இதையடுத்து கண்மாயில் தாழ்வான பகுதிகளில் இருந்த தண்ணீரை டீசல் மோட்டார் மூலம் வெளியேற்றப்பட்டு, மீன்களை தொழிலாளர்கள் பிடிக்கும் பணி நடக்கிறது.

பெரிய கண்மாயில் உள்ள மீன்கள் ரூ.7 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டதாக விவசாயிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us