sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

வண்டல் மண் எடுக்க அனுமதி: விதிமீறினால் நடவடிக்கை

/

வண்டல் மண் எடுக்க அனுமதி: விதிமீறினால் நடவடிக்கை

வண்டல் மண் எடுக்க அனுமதி: விதிமீறினால் நடவடிக்கை

வண்டல் மண் எடுக்க அனுமதி: விதிமீறினால் நடவடிக்கை


ADDED : ஜூலை 31, 2025 10:57 PM

Google News

ADDED : ஜூலை 31, 2025 10:57 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாடானை; திருவாடானை தாலுகா வில் வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. விதி மீறி அள்ளினால் நடவடிக்கை எடுக்கப்படும் என தாசில்தார் ஆண்டி கூறினார்.

அவர் கூறியதாவது:

பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ள நீர் நிலைகளில் படிந்து உள்ள வண்டல் மண், களிமண், கிராவல், மண் போன்ற சிறு கனிமங்களை துார்வாரி விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள அரசு அனுமதி அளித்து உள்ளது. திருவாடானை தாலுகாவில் 100க்கும் மேற்பட்ட கண்மாய் களிலும், 100க்கும் மேற்பட்ட ஊருணிகளிலும் வண்டல் மண் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

விவசாயிகள் அரசிதழில் வெளியிட்டுள்ள ஆணைப்படி விண்ணப்பதாரர்கள் தங்கள் மனுக்களை இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. நீர் பிடிப்பு பகுதியில் தண்ணீர் இல்லாத காலங்களில் மட்டும் தான் மண் எடுக்க வேண்டும்.

ஒரே இடத்தில் அள்ளா மல் பரவலாக அள்ள வேண்டும். மண்ணை வெட்டி எடுக்கும் போது தரையின் மட்டம் கண்மாயில் உள்ள மடையின் அடி மட்டத்திற்கு கீழ் சென்று விடக்கூடாது. வாகனங்கள் செல்வதற்கு முடியாத அளவில் கரையை வெட்டக்கூடாது. கலுங்கு, மதகுகளுக்கு சேதம் ஏற்பட்டுவிடக் கூடாது.

ஊருணிகளில் இயற்கை தன்மை பாதிக்கக்கூடாது. அனுமதி வழங்கப்பட்ட இடத்தில் மட்டுமே மணல் அள்ள வேண்டும். விதி மீறி மண் அள்ளினால் மனுதாரர் மீது கனிம விதிகள் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.






      Dinamalar
      Follow us