ADDED : பிப் 10, 2024 11:55 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரமக்குடி: -பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் தை கடைசி வெள்ளி ஊஞ்சல் சேவை நடந்தது.
பரமக்குடி சவுந்தரவல்லி தாயார் சமேத சுந்தரராஜ பெருமாள் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் தை வெள்ளிக்கிழமைகளில் ஊஞ்சல் சேவை நடப்பது வழக்கம். தொடர்ந்து நான்காவது வெள்ளிக்கிழமையில் மாலை 6:00 மணிக்கு பெருமாள் தயாருடன் ஊஞ்சலில் எழுந்தருளினார்.
ஏகாந்த சேவையில் அருள் பாலித்த சுவாமிகளுக்கு இரவு 8:00 மணிக்கு சிறப்பு தீபாராதனைகள் நடந்து பிரசாதங்கள் வழங்கப்பட்டன. பாகவதர்கள் பக்தி பாடல்களை பாடினர்.