/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அரசு மருத்துவமனைகளில் கூடுதல் டாக்டர்கள் நியமிக்க வலியுறுத்தல் தினமலர் செய்தியுடன் மனு
/
அரசு மருத்துவமனைகளில் கூடுதல் டாக்டர்கள் நியமிக்க வலியுறுத்தல் தினமலர் செய்தியுடன் மனு
அரசு மருத்துவமனைகளில் கூடுதல் டாக்டர்கள் நியமிக்க வலியுறுத்தல் தினமலர் செய்தியுடன் மனு
அரசு மருத்துவமனைகளில் கூடுதல் டாக்டர்கள் நியமிக்க வலியுறுத்தல் தினமலர் செய்தியுடன் மனு
ADDED : ஜன 07, 2025 04:35 AM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதாரநிலையங்களில் டாக்டர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் பாதிக்கப்படுகின்றனர். உடனடியாக நியமிக்க கோரிக்கை எழுந்துள்ளது.
சோழந்துாரை சேர்ந்த புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்., மக்கள் முன்னேற்றக் கழகம் நிறுவனர் பானை மணி. இவர் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்திற்கு முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., படம் மற்றும் தினமலர் நாளிதழில் வெளியான செய்திகளுடன் மனு அளித்தார். அவர் கூறுகையில், அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை, ஆர்.எஸ்.மங்கலம், திருவாடானை, ராமேஸ்வரம் அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதுமான டாக்டர்கள் இல்லாமல் நோயாளிகள் பாதிக்கப்படுகின்றனர்.
எனவே உடனடியாக டாக்டர்கள் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்றார்.