/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
முதுகுளத்துாரில் குழாய் சேதம் வீணாகும் காவிரி குடிநீர் அதிகாரிகள் அலட்சியம்
/
முதுகுளத்துாரில் குழாய் சேதம் வீணாகும் காவிரி குடிநீர் அதிகாரிகள் அலட்சியம்
முதுகுளத்துாரில் குழாய் சேதம் வீணாகும் காவிரி குடிநீர் அதிகாரிகள் அலட்சியம்
முதுகுளத்துாரில் குழாய் சேதம் வீணாகும் காவிரி குடிநீர் அதிகாரிகள் அலட்சியம்
ADDED : ஜன 21, 2025 05:41 AM

முதுகுளத்துார்: முதுகுளத்துார் பிள்ளையார் கோயில் எதிரே பரமக்குடி ரோட்டில் காவிரி குடிநீர் செல்லும் ராட்சத குழாய் ஒரு மாதத்திற்கு மேலாக சேதமடைந்து குடிநீர் வீணாகி வருகிறது.
முதுகுளத்துார் ரோட்டோரத்தில் ராட்சத குழாய் பதிக்கப்பட்டு பேரூராட்சி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கு காவிரி குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. பரமக்குடி ரோடு பிள்ளையார் கோயில் எதிரில் ராட்சத குழாய் சேதமடைந்து ஒரு மாதமாக காவிரி குடிநீர் வீணாகி கழிவுநீர் கால்வாய் செல்கிறது.
இதனால் கிராமங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. சில கிராமங்களில் காவிரி குடிநீருக்காக மக்கள் சிரமப்படுகின்றனர். எனவே முதுகுளத்துாரில் ராட்சத குழாய் சேதத்தை சரி செய்ய குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.