நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே சிறுமணியேந்தல் கிராமத்தில் தானம் கண்மாய் வயலக அறக்கட்டளையின் 25ம் ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது. கமுதி வட்டார இயக்கத் தலைவர் கதிரேசன் தலைமை வகித்தார். குண்டாறு மண்டல ஒருங்கிணைப்பாளர் முருகையா முன்னிலை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் கண்ணன் வரவேற்றார்.
அப்போது சிறுமணியேந்தல் கிராமத்தில் கிராம மக்கள் முன்னிலையில் நீர்நிலை பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட மரக்கன்று நடப்பட்டது. பின் வயலக பத்து செயல்பாடுகளும், கலை நிகழ்ச்சியும் நடந்தது. வட்டாரத் தலைவர் பாண்டித்துரை நன்றி கூறினார்.

