sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

முன்னாள் அமைச்சர் தவறவிட்ட 6 பவுன் செயின் மீட்பு போலீசாருக்கு பாராட்டு

/

முன்னாள் அமைச்சர் தவறவிட்ட 6 பவுன் செயின் மீட்பு போலீசாருக்கு பாராட்டு

முன்னாள் அமைச்சர் தவறவிட்ட 6 பவுன் செயின் மீட்பு போலீசாருக்கு பாராட்டு

முன்னாள் அமைச்சர் தவறவிட்ட 6 பவுன் செயின் மீட்பு போலீசாருக்கு பாராட்டு


ADDED : நவ 28, 2024 05:01 AM

Google News

ADDED : நவ 28, 2024 05:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம்: சென்னையில் இருந்து ராமேஸ்வரம் அருகே மண்டபம் வந்த ரயிலில்காணாமல் போன முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்தியின் தங்க செயின் மண்டபம் ரயில் நிலையத்தில் மீட்கப்பட்டது.

ஜெ., 1991--96ல் முதல்வராக இருந்த போது சத்தியமூர்த்தி அமைச்சராக இருந்தார். தற்போது தி.மு.க.,வில் உள்ளார். இவர் நேற்று முன்தினம் சென்னையில் இருந்து மண்டபம் வந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏ.,சி., பெட்டியில் பயணித்துஉள்ளார்.

இவரது 6 பவுன் தங்கச் செயினை கழற்றி தலையணைக்கு கீழ் வைத்து துாங்கியுள்ளார். பின் சொந்த ஊரான சாயல்குடி அருகே மேலச்செல்வனுார் செல்ல பரமக்குடி ரயில்வே ஸ்டேஷனில் இறங்கிய போது செயினை எடுக்காமல் சென்று விட்டார்.

ஊருக்கு சென்றதும்செயின் காணாமல் போனது குறித்து போலீசாருக்கு தெரிவித்தார். இதையடுத்து ராமேஸ்வரம் ரயில்வே போலீஸ் எஸ்.ஐ., முத்துமுனியசாமி, தனிப்பிரிவு காவலர்மல்கோத்ரா பாண்டியன்மண்டபம் ரயில்வே ஸ்டேஷன் சென்று ரயில் பெட்டியில் கிடந்த தங்க செயினை முன்னாள் அமைச்சரின் உறவினரிடம் ஒப்படைத்தனர்.

செயின் காணாமல் போனதும் போலீசார் துரிதமாக செயல்பட்டு மீட்டதை பயணிகள் பாராட்டினர்.






      Dinamalar
      Follow us