sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

கடலாடி பஸ் ஸ்டாண்ட் நுழைவு பகுதியில் ஆபத்தான கம்பிகள் கண்டுகொள்ளாத போலீசார்

/

கடலாடி பஸ் ஸ்டாண்ட் நுழைவு பகுதியில் ஆபத்தான கம்பிகள் கண்டுகொள்ளாத போலீசார்

கடலாடி பஸ் ஸ்டாண்ட் நுழைவு பகுதியில் ஆபத்தான கம்பிகள் கண்டுகொள்ளாத போலீசார்

கடலாடி பஸ் ஸ்டாண்ட் நுழைவு பகுதியில் ஆபத்தான கம்பிகள் கண்டுகொள்ளாத போலீசார்


ADDED : ஆக 07, 2025 07:14 AM

Google News

ADDED : ஆக 07, 2025 07:14 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலாடி : கடலாடி பஸ் ஸ்டாண்டிற்குள் நாள்தோறும் ஏராளமான டவுன் பஸ்கள் மற்றும் தனியார் பஸ்கள் வந்து செல்கின்றன. இந்நிலையில் பஸ் ஸ்டாண்ட் நுழைவு வாயில் பகுதி எம்.ஜி.ஆர்., சிலை அருகே ஆபத்தான முறையில் பிளக்ஸ் போர்டு கம்பிகளை சுவற்றில் சாய்த்து வைக்கும் போக்கு தொடரவே செய்கிறது.

தன்னார்வலர்கள் கூறியதாவது: கடலாடி பஸ் ஸ்டாண்ட் செல்லும் தார் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. புதிய தார் ரோடு அமைக்க கோரி முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. இந்நிலையில் பஸ் ஸ்டாண்ட் நுழைவு வாயில் பகுதியில் பிளக்ஸ் போர்டு கம்பிகள் வைக்கும் இடமாக உள்ளது.

இதனால் பஸ் ஸ்டாண்டிற்குள் நுழையக்கூடிய பஸ்களின் மீது மோதி விபத்திற்குள்ளாகும் வகையில் இரும்பு கம்பிகள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே டூவீலர்களாலும் பஸ் ஸ்டாண்டில் பல பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலையில் பயணிகள் மற்றும் பஸ்சிற்கு இடையூறாக உள்ளது. காலை, மாலை நேரங்களில் கடலாடி போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்றனர்.






      Dinamalar
      Follow us