ADDED : மார் 10, 2026 04:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: ராமேஸ்வரம் அடுத்த குஞ்சார்வலசையில் உள்ள தனியார் மஹாலில் முன்னாள் போலீஸ் அதிகாரிகளின் 4வது மாநில மாநாடு நடந்தது.
ராமநாதபுரம் மாவட்ட தலைவர் காமராஜ் தலைமை வகித்தார். இதில் 1984ம் ஆண்டு போலீஸ் துறையில் சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ஒவ்வொரு ஆண்டும் அனைத்து மாவட்ட உறுப்பினர்களும் இணைந்து மாநில அளவில் மாநாடு நடத்துகின்றனர்.
நடப்பாண்டில் சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்கள் இணைத்து 4வது மாநில மாநாடு நடத்தப் பட்டது. இதில் 70 வயதை கடந்த 3 பேரின் பிறந்த நாள் கொண் டாடப்பட்டது.

