sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

கார்களில் கட்சி கொடியுடன் வலம் வரும் அரசியல்வாதிகள்: கண்டுகொள்ளாத அதிகாரிகள்

/

கார்களில் கட்சி கொடியுடன் வலம் வரும் அரசியல்வாதிகள்: கண்டுகொள்ளாத அதிகாரிகள்

கார்களில் கட்சி கொடியுடன் வலம் வரும் அரசியல்வாதிகள்: கண்டுகொள்ளாத அதிகாரிகள்

கார்களில் கட்சி கொடியுடன் வலம் வரும் அரசியல்வாதிகள்: கண்டுகொள்ளாத அதிகாரிகள்


ADDED : மார் 19, 2024 10:42 PM

Google News

ADDED : மார் 19, 2024 10:42 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேவிபட்டினம் : தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த நிலையிலும் தேவிபட்டினம், ஆர்.எஸ். மங்கலம் பகுதிகளில் உரிய அனுமதியின்றி கார்களில் கட்சியினர் கொடிகளுடன் வலம் வருகின்றனர்.

தமிழகத்தில் ஏப்ரல் 19ல் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளதை தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

அதைத் தொடர்ந்து பொது இடங்கள் மற்றும் தனியார் கட்டடங்களில் உள்ள அரசியல் கட்சியின் சின்னங்கள், கொடிக் கம்பங்கள், கொடிகள் உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்களின் புகைப்படங்கள் அனைத்தும் அகற்றப்பட்டுள்ளன.

அதே போன்று அரசியல் கட்சியினர் மற்றும் தனிநபர் வாகனங்களில் கட்சி கொடிகளுடன் வலம் வருவதும் தடை செய்யப்பட்டுள்ளது. தேர்தல் அலுவலரிடம் முறையான அனுமதி பெற்ற வாகனங்கள் மட்டுமே கட்சி கொடியுடன் வலம் வருவதற்கு அனுமதி உள்ளது.

இந்நிலையில், திருவாடானை சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட தேவிபட்டினம், ஆர்.எஸ்.மங்கலம், திருப்பாலைக்குடி, பனைக்குளம், உப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் கட்சியினர் தங்களது வாகனங்களில் அரசியல் கட்சி கொடிகள் கட்டியுள்ளனர்.

எனவே, அனுமதியின்றி கட்சிக்கொடியுடன் வலம் வரும் வாகனங்கள் மீது தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்

ஆர்.எஸ்.மங்கலம் தாசில்தார் பாலகிருஷ்ணன் கூறுகையில், சோதனையின் போது வரும் வாகனங்களை கட்சிக்கொடி அகற்றப்படுகிறது. பிறவாகனங்களையும் கண்காணித்து அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.






      Dinamalar
      Follow us